ஜெயமோகனுக்கு
இயல்
விருது
2014
கனடா
தமிழ்
இலக்கியத்
தோட்டத்தின்
வருடாந்திர
இயல்
விருது
இவ்வருடம்
திரு.பா.ஜெயமோகன்
அவர்களுக்கு
வழங்கப்படுகிறது.
சமகாலத்தில் 'எழுத்து
அசுரன்'
என்று
வர்ணிக்கப்படும்
இவர்
புதினங்கள்,
சிறுகதைகள்,
காப்பியம்,
இலக்கியத்திறனாய்வு,
பழந்தமிழ்
இலக்கியம்,
மொழியாக்கம்,
அனுபவம்,
தத்துவம்,
ஆன்மீகம்,
பண்பாடு,
திரைப்படம்
என
தமிழ்
இலக்கியத்தின்
அனைத்துத்
துறைகளிலும்
தனது
எழுத்தின்
மூலம்
ஆழமான
முத்திரையை
தொடர்ந்து
பதித்து
வருகிறார்.
இந்த
விருதைப்
பெறும்
16வது
எழுத்தாளர்
இவராகும்.
இதற்கு
முன்னர்
சுந்தரராமசாமி,
வெங்கட்
சாமிநாதன்,
ஜோர்ஜ்
ஹார்ட்,
ஐராவதம்
மகாதேவன்,
அம்பை,
எஸ்.பொன்னுத்துரை,
எஸ்.ராமகிருஷ;ணன்,
நாஞ்சில்நாடன்,
சு.தியடோர்
பாஸ்கரன்,
டொமினிக்
ஜீவா
போன்றவர்களுக்கு
இவ்விருது
வழங்கப்பட்டிருக்கிறது.
ஜெயமோகன் 1962ல்
அருமனையில் (கன்னியாகுமரி)
பிறந்தார்.
நாகர்கோயில்
பயோனியர்
குமாரசாமிக்
கல்லூரியில்
வணிகவியல்
இளங்கலை
படிப்பை
பாதியிலே
விட்டுவிட்டு
இந்தியா
முழுவதும்
இரண்டு
வருடமாக
அலைந்து
வாழ்கையை
கற்றுக்கொண்டார்.
1984ல்
கேரளத்தில்
காசர்கோடு
தொலைபேசி
நிலையத்தில்
தற்காலிக
ஊழியராக
வேலைக்குச்
சேர்ந்தார்.
எழுத்தாளர்
சுந்தர
ராமசாமியால்
ஆற்றுப்படுத்தப்பட்டு
தமிழ்
இலக்கியத்துக்குள்
நுழைந்தார். 1987ல்
அவர்
எழுதிய
'நதி'
சிறுகதை
முதன்முறையாக
கணையாழியில்
பிரசுரமாகி
அவர்
எழுத்து
வாழ்க்கையை
ஆரம்பித்து
வைத்தது.
இவருடைய 'விஷ;ணுபுரம்'
நாவல்
பரவலாக
வாசகர்களை
அடைந்து
பெரும்
புகழ்பெற்றது.
அதைத்
தொடர்ந்து
காடு,
ஏழாம்
உலகம்,
கொற்றவை,
வெள்ளை
யானை
ஆகிய
13
நாவல்களையும், 11
சிறுகதை
தொகுப்புகளையும், 50
கட்டுரை
நூல்களையும்
இதுவரை
எழுதியிருக்கிறார். 1990
ஆண்டு
அகிலன்
நினைவுப்போட்டிப்
பரிசு,
1992
ஆண்டுக்கான
கதா
விருது,
1994
ஆண்டுக்கான
சம்ஸ்கிருதி
சம்மான்
தேசியவிருது, 2008
ஆண்டு
பாவலர்
விருது,
2011
ஆண்டு
'அறம்'
சிறுகதைத்
தொகுதிக்காக
முகம்
விருது
ஆகியவற்றைப்
பெற்றிருக்கிறார்.
ஜேயமோகன்
பங்கேற்று
வெளிவந்த
திரைப்படங்கள்
கஸ்தூரிமான்,
நான்
கடவுள்,
அங்காடித்தெரு,
நீர்ப்பறவை,
ஒழிமுறி,
கடல்,
ஆறு
மெழுகுவர்த்திகள்,
காஞ்சி,
காவியத்தலைவன்
ஆகியவை
பெரும்
வெற்றியீட்டின.
1998
முதல்
2004
வரை
'சொல்புதிது'
என்ற
சிற்றிதழை
நண்பர்களுடன்
இணைந்து
நடத்தினார். 2010ஆம்
ஆண்டு
முதல்
இவரது
படைப்பான
விஷ;ணுபுரம்
பெயரால்
'விஷ;ணுபுரம்
இலக்கிய
வட்டம்'
இலக்கிய
ஆளுமைகளுக்கு
விருது
அளித்து
வருகிறது.
அபூர்வமான
சொல்லழகும்,
பொருள்
செறிவும்
கொழிக்கும்
மொழியில் 2014
புத்தாண்டின்
முதல்நாள்
தொடங்கி
மகாபாரத்தின்
மறுஆக்கமாக
இவர்
தற்போது
இணையத்தில் 'வெண்முரசு'
நாவலை,
ஒவ்வொரு
நாளும்
ஓர்
அத்தியாயம்
எனப்
பத்தாண்டுகள்
திட்டமிட்டு,
எழுதி
வருகிறார்.
ஏறக்குறைய
நாற்பது
நாவல்களாக
இது
நிறைவுபெறும்.
தமிழில்
வேறு
யாருமே
முயற்றிராத
பிரம்மாண்டமான
பணி
இது.
இவருடைய
மனைவி
அருண்மொழி
நங்கை,
மகன்
அஜிதன்,
மகள்
சைதன்யாவுடன்
நாகர்கோவிலில்
வசித்து
வருகிறார். 'இயல்
விருது'
கேடயமும், 2500
டாலர்
பணப்பரிசும்
கொண்டது.
விருது
வழங்கும்
விழா
ரொறன்ரோவில் 2015
ஜீன்
மாதம்
வழமைபோல
நடைபெறும்.
www.tamilauthors.com
|