ஹைக்கூ !

கவிஞர் இரா.இரவி

தெருவெல்லாம்
முழக்கம்
தமிங்கிலம் !

தொடங்கினர்
ஒப்பாரி
இறக்கும்முன்பே !

உதவவில்லை பெற்ற மகன்
உதவியது
ஒய்வு ஊதியம் !

மறந்தான் வளர்த்த மகன்
காக்கின்றன
வளர்த்த மரங்கள் !

குடிக்காதீர் அன்று
குடித்துவிட்டு வாகனம்
ஓட்டாதீர் இன்று !

சுகம் காணுகின்றனர்
சும்மா இருப்பதில்
சோம்பேறிகள் !

பிறரைக் காதிலிப்பது பின்பு
முதலில் காதலி
உன்னை !

நிறைந்து வழிகின்றன
குறைகள்
குறை தீர்க்கும் நாளில் !

அல்லாடுகின்றனர்
அடிப்படைத் தேவைகளுக்கு
மக்கள் !

வீணாய் கலக்காது கடலில்
போராடிப் பெற்ற
காவிரி !

இயற்கைக்கு இருக்கும் கருணை
இருப்பதில்லை
மனிதர்களுக்கு !

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்