நாய்களை கண்டால் பயம் எங்களுக்கு

பிரபு

ஒருநாள்
அழகான இரவின்
அமைதி குலையும்படி
எங்கள் குடியிருப்பின்
வடக்குப் பகுதியில் இருந்து
தெரு நாய்கள் சில குரைத்தது

எல்லா நாய்களை போல
லொல் லொள் என்றில்லாமல்
மதம் மதம் என்று அது குரைத்தது

'இது நாய்களிலே ஒரு
பைத்தியகார நாய்' - என்று
என்ணினோம் நாங்கள்

நாட்கள் நகர
நாய்களின் எண்ணிக்கை
அதிகமானது - ஆம்
பக்கத்து குடியிருப்பில் இருக்கும்
பக்குவமில்லாத மனிதர்கள் சிலரும்
நாயாக மாறியிருந்தார்கள்

ஆம்
இந்த நாய்களின்
மதம் மதம் என்ற மந்திர சப்ததிற்க்கு
அப்படியொரு சக்தி

காதுகொடுத்து கேட்போரையெல்லாம்
மயக்க நிலைக்கு தள்ளி
நாய்களாய் மாற்றிவிடும்

இப்போ
மதம் மதம் என்ற சப்தம்
சற்று அதிகமகவே கேட்க்குது

நாக்கை தொங்கவிட்டபடி
கூர்பற்களை காட்டும் அந்த
நாய்களை கண்டு
மனிதர்களாகிய எங்களுக்கு பயம்
அவற்றை அடித்து விரட்ட
ஆசைதான் - ஆனால் எங்களுக்கு
கடித்து விடுமோ என்ற பயம்

மதம் மதம் என்று
குரைத்துக்கொண்டே தங்களுக்குள்ளாக
அவைகள் அடித்து கொள்கின்றன

தெருவில் நடக்கவே
பயமாக உள்ளது எங்களுக்கு

இன்னும்
மதம் மதம் என்ற சப்தம்
கேட்டுகொண்டே இருக்கிறது
மிக அருகில், மிக அதிகமாக கேட்கிறது

பயம் அதிகமாக உள்ளது
பக்குவப்பட்டவர்கள் குறைவாக உள்ளனரோ ?!?- என்று
பயம் அதிகமாகவே உள்ளது

சப்தம் கேட்டுகொண்டே இருக்கு
மதம்॥ மதம்.. மதம்.. மதம்..


priyamudan.prabu83@gmail.com