ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் இரா.இரவி
 

ணர்த்தியது
அழித்தால் அழிப்பேன்
இயற்கை !

ணர்த்தியது
சிதைத்தால் சிதைப்பேன்
இயற்கை !

ணிகருக்கு வரும் இலாபம்
வருவதில்லை
உழவருக்கு !

சிதைத்து வருகிறான்
சிங்களன்
மீனவர் வாழ்வை !

முடிவெடுத்த நாளில்
பண்டிகை கொண்டாடுங்கள்
ஏமாறும் குழந்தைகள் !

ருத்துக்கணிப்பு
என்ற பெயரில்
கருத்துத்திணிப்பு !

பார்க்கின்றனர் சோதிடம்
கோடித்திருடர்களை
சிறைபிடிக்க !

ருந்தாதே இன்னலுக்கு
வரும் இன்பம்
இதுவும் கடந்து போகும் !

இரவு பகலாகும்
இன்னல் தீரும்
நம்புக நடக்கும் !

வலைகட்டி காத்திருந்தது
பூச்சிக்காக
சிலந்தி !

கொள்ளையர்கள் தப்புகின்றனர்
வாகன ஓட்டிகள் மாட்டுகின்றனர்
காவலரிடம் !

இறங்குவதே இல்லை
ஒருவழிப்பாதை
விலையேற்றம் !

விரும்பினால் போதாது
செய்க
அறம் !

சைவமாகும்
ஆடு
சைவம் !

றுகளில் வெள்ளம்
வருத்தத்தில்
மணல் கொள்ளையர்கள் !

பொம்மை உடைந்தது
உடைந்தது
குழந்தையின் மனம் !

ரண்டுமே
கற்பிதம்
கடவுள் பேய் !

சொட்டுத் தண்ணீர் மறுத்தோரின்
கொட்டம் அடக்கியது
இயற்கை !

தீங்கு செய்தாருக்கும்
நன்மை செய்திடும்
தமிழர்கள் !

தவியது கேரளத்திற்கு
பேருள்ளம்
சிறுமிக்கு !

துரையின் மாண்பு
கேரளத்தில் ஒளிர்ந்தது
வாழ்க ஆட்சித்தலைவர் !

தேநீர் தேசம்
கண்ணீர் தேசமானது
இயற்கையின் சீற்றம் !

ட்டமிடும் மனிதா
இனியாவது உணர்
இயற்கையே பெரிது !

தவிடும் உள்ளங்களில்
வாழ்கிறார்
அன்னை தெரசா !

த சாதி இனம் மொழி
வேறுபாடு தகர்த்தது
மனிதநேயம் !




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்