ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.



முறிந்து துண்டாகிறது
மாலை சூரியன் பெயர்க்கையில்,
மர நிழல்.

சுருதியை கடத்திச் செல்கிறது
மிதக்கும் இலை -
பரிதவிப்பில் பாடகன்.

கிழிக்கப்பட்டுள்ளது
பௌத்த மட அகராதியிலிருந்து
'ஆசை' சொல்லுக்கான பக்கம்.

பிரியா விடை அளிக்கிறது
விடுதலை அடையும் கைதிக்கு -
சீருடை

டிப்படாமல் வெளியேறுகிறது
'நாய்கள் ஜாக்கிரதை' வீட்டிலிருந்து
மாலை வெய்யில்.

கோடைக்காலம் -
காலிக்குடத்துடன் வருகிறாள்,
சாணைப் பிடிக்க.

ப்பி விடும் மீன்கள்,
கொக்கொன்று காலுயர்த்துகையில்.
அருகில் தூண்டில்காரன்.






 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்