ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் இரா.இரவி

ரலாம் நன்கொடை
தரக்கூடாது பெற்றோரை
முதியோர் இல்லத்திற்கு !

ழுக்கம் தவறினால்
வந்திடும் இழுக்கு
நற்பெயருக்கு !

ல ஆண்டுகளில் பெற்ற புகழ்
சில நொடிகளில்
தகர்ப்பு !

பெரும் புகழுக்கு
வந்தது களங்கம்
சபலம் !

விருதுகள் பல பெற்றும்
விரும்பத்தகாத செயல்
வீழ்த்திவிடும் !

ரும்புள்ளியே
கண்ணில்படும்
வெள்ளைக் காகிதத்தில் !

ல்ல மழை
சோதிடர்கள் காட்டில்
குரு பெயர்ச்சி !

சும்மா இருந்த சங்கை
ஊதிவிட்ட ஆண்டிகள்
பத்திரிகையாளர் கைது !

னிதாபிமானமற்ற செயல்
சிறையிலும் நடக்குது
கொலை !

காத்திருப்பின்
கடுப்பை நீக்கியது
அலைபேசி !

விடிய விடிய விழிப்பு
விடிந்ததும் தூக்கம்
அலைபேசி !

நேரத்தை விழுங்குது
உழைப்பை சுருக்குது
அலைபேசி !

ளையோரின் வாழ்வில்
இறக்குது இடியை
அலைபேசி !




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்