அவளும்...எச்சிலிலையும்...

மன்னார் அமுதன் - இலங்கை

என்றோ....
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி

'பாவம்,
தின்னட்டும்'

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டதைத் தின்று
மீந்ததை ஈந்து
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் பின்செலும்

இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில்
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள் செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுள்
எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும் ...
குரல் கொடுத்தவனும் ...



amujo1984@gmail.com