பெண்னெனில் தேவதையோ..

வித்யாசாகர்

பொன்னிற காட்டில்  
வெண்ணிறம்
 உடையாள் இவள்,

சங்க காலம் சூட மறந்த
இந்த
 கால -
செஞ்சூட்டு
ஒளியாளிவள்..,

இவளின்,
இழுத்து
 சுற்றிய சேலைக்குள்ஒளித்து வைத்துள்ள  
இன்பத்
 தேர் அதிசையமும்

கடித்து இழுக்க மதுரம் தெறிக்கும் 

சிலிர்ப்பூட்டும்
 செவ்விதழும்,

ஈரம் படிந்த இதழ்களிலே 
ஒத்தியெடுக்க
மிகுந்த முத்தங்களும்..,

கண்ணம் முழுக்க கதகதப்பில் - குவிந்த
வர்ண
 காதல் ரேகையும்,

ஆசைகளில் புதைந்து போன 
நளினத்தின்
;
வாலிப்பு
 குறையாத வளைவு சித்திரமும்,

மேனி அழகை கூட்டிக் காட்டும் 
கழுத்தாய்
 பூத்த -
சங்கு
 மலரும்,

அகன்று விரிந்த மார்பின்  
கவர்ச்சி
 மறைத்தும்; மலர்ந்தும்
தொடும்
 உணர்வில் பூக்கும் மேனி - இரண்டெழிலும்,

மூச்சுக் காற்றில் மேனி பரவி
இடைகொடி
 வளைத்து நடனமாட 
அழகு
கொஞ்சும் மேட்டுக் குழி - சிணுங்கல் ஜாலமும்,

இன்னும் தேடி கிடைக்கும் வர்ணனையில்
சொல்ல
 மிகாமல் உள் புதைத்த -
பெண்
- மயிலின்; பெண்மை வாழ் நதியலை சுகந்தமும்,

அப்பப்பா!! பெண்ணிவளே; பெண்ணிவளே;
' பெண்ணென்றால் தேவதையோ -
என்னவளே
; அடி என்னவளே.... இதயம் தட்டி உள்புகும் 
வெப்ப
 நெருப்பே;

பஞ்சு பூட்டிய மேனியினால் - நெஞ்சு பூரித்தவளே
வா
..
வாசல்
 திறக்காத வழிக்குள் புகுந்து  
காமம்
சொட்டாத காதல் தேரிழுப்போம்! வா..!!


vidhyasagar1976@gmail.com