கம்பன் கவியே கவி!

மதுரை பாபாராஜ்

வால்மீகி காவியத்தை வண்டமிழர் பண்பாட்டின் 
நேர்த்தி
 குறையாமல் நற்றமிழில் - தோய்த்தேதான் 
இன்றளவும் என்றும்
 நிலைக்குமாறு தந்துவக்கும் 
கம்பன் கவியே
 கவி.

சடையப்ப வள்ளலின் ஊக்கத்தால் ஆக்கம் 
தடையின்றிக்
 காவியமாய் மாற -- முறையாக 
தன்புலமை
 ஆற்றலை நன்றியுடன் பாடுகின்ற 
கம்பன் கவியே கவி.

பெற்றோரின் ஆணை எதுவெனினும் பிள்ளைகள் 
தட்டாமல்
 ஏற்றேதான் கீழ்ப்படியும் -- அற்புதப் 
பண்புகளை
 நெஞ்சில் இழையோட வைத்திருக்கும் 
கம்பன் கவியே கவி.

கணவனைச் சுற்றியே வாழ்வில் நடக்கும் 
மனைவியின்
 மாண்புதனைக் காட்டி -- மனத்திலே 
பெண்மையைப்
 போற்றி வணங்கவைக்கும் பாங்கிலே
கம்பன் கவியே கவி.
 

பெண்ணாசை  கொண்டே இராவணன் கூட்டத்தார்
என்னென்ன போர்முறைக்கு வித்திட்டார் --- பொங்கிவந்த
தன்னலக் கூத்துக்கள் தோல்விக்கே மூலமென்ற
கம்பன் கவியே கவி.

ராமன் நினைத்தால் மணித்துளி போதுமே!
பூமணக்கும் சீதையுடன் சேர்ந்திருப்பான் --- ஆனாலும்
மண்ணில் அவதாரம் வெற்றிபெற வைத்திட்ட
கம்பன் கவியே கவி.

ஆற்றல் இருந்தாலும் நன்னெறியை வாழ்விலே
போற்றாமல் வன்முறையில் சென்றுவிட்டால் -- தூற்றுகின்ற
தண்டனை நிச்சயம் என்பதைக் காட்டுகின்ற
கம்பன் கவியே கவி.

அவையடக்கம், நட்பு, எளிமை, பணிவு
இவையெல்லாம் வாழ்வில் இருந்தால் -- அவனியில்
என்றும் உயர்வுதான் என்றே உணர்த்துகின்ற
கம்பன் கவியே கவி.

காவியப் போக்கின் படைப்புகள் எல்லாமே
சீர்மிகு பின்னலாய் நீக்கமற -- ஆழ்நிலை
அன்பினை உள்ளம் வெளிப்படுத்தத் தூண்டிவிடும்
கம்பன் கவியே கவி.

எண்ணற்ற காவியங்கள் பாரில் இருந்தாலும்
பண்பால்
, தரத்தால்,கவிதைச் செழுமையால் 
கம்பன் படைப்பில்
 நிமிர்ந்துவிட்டான்! அத்தகைய 
கம்பன் கவியே கவி.

 

spbabaraj@gmail.com