யாதுமாகி நிற்கின்றாய்..

மன்னார் அமுதன்                   

யாதுமாகி நிற்கின்றாய் தோழி
தாயுமாய்
தாரமாய் 
ஏதுமாய் நீயே
எங்கும்
நிறைந்தே 
என்னில்
எழில் புரிந்தாயே

சாது நான் உன்னிலே
கொண்ட
காதலால்
மாது
நீ ஆகினாய்
என்னில்
பாதியாய்

பாதி பாதி சேர்ந்து ஆன
முழுமதியாக
- நம்
காதல்
சேர்ந்து ஆகிறதே
சிறு
கருவாக

மீதமாகிப் போகும் 
நிதம்
பொங்கும் பாசமே - அதை
நிவர்த்தி
செய்ய வருகிறான்
நம்
குட்டி வாசனே



amujo1984@gmail.com