விலகிப்
போனவன்
எம்.ரிஷான்
ஷெரீப்,
இலங்கை
பூக்களை
ஏந்திக்
கொண்டவன்
வாழ்வின்
இனிய
நாதத்தைக்
கற்றுத்தந்தவன்
தனித்த
பசிக்குச்
சுய
சமையலையும்
விரக்தி
நிரம்பிய
ஏகாந்தப்
பொழுதுகளில்
மனதோடு
இசைக்கப்
பாடல்களையும்
அருகிலிருந்து
சொல்லித்
தந்தவன்
சொல்லியோ
சொல்லாமலோ
அன்பின்
பிடியிலிருந்து
யாரோவாகி
அவன்
நகர்ந்தவேளை
தெரியாமலே
போயிற்று
இறுதியில்
தெரிந்தது
ஆழ்கிணறுகளின்
பழுப்பு
தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில்
துளிர்க்கும்
பசுந்தளிர்,
சிறு
மலர்களைப்
போன்று
பார்த்துப்
பார்த்து
மகிழும்படியான
வாழ்வினை
அவன்
விட்டுச்
செல்லாதது
சிலவேளை
வெயிலும்
சிலவேளை
மழை
இருட்டுமாக
இப்பொழுதெல்லாம்
காலம்
வாழ்வியலைக்
கற்றுத்தருகிறது
சிலவேளை
பனியைத்
தூவியும்
சிலவேளை
பழைய
நினைவுகளைச்
சுட்டி
இம்சித்தும்
mrishansha@gmail.com
|