சட்டத்தில்
இடமுண்டோ
?
முனைவர் ச.சந்திரா
நிலமகள்
பச்சை
வண்ண
பட்டாடை
களையப்பட்டு
கந்தர்
கோலத்துடன்
காட்சி
!
நாற்று
நட்ட
பெண்களெல்லாம்
காற்று
வாங்கிக்
கொண்டு
தீப்பெட்டிஆபீஸ்
பேரூந்தில்
பயணம்
!
களையெடுத்தவரெல்லாம்
இன்று
நூற்பாலைக்கு
பறக்கின்றனர்
பருத்திப்பஞ்சை
விட
வேகமாக
!
பூமகள்
மேனி
அளக்கப்பட
சிலுவைத்
தழும்புகளாய்
அதில்
கல்
ஆணிகள்
!
புல்பூண்டுகள்
இருந்த
இடத்தில்
இன்று
கற்குவியல்களும்
கான்கீரீட்
கலவையும்
.
மந்தையிலிருந்து
ஆடுகள்
அனைத்துமே
தப்பின
இலைதழை
இல்லாமல்
!
பசும்பயிர்கள்
வாழ்ந்த
இடத்தில்
பலமாடி
கட்டிடங்கள்
பளிங்கு
கற்கள்
பதிக்கப்பட்டு
!
ஐந்தறிவு
ஜீவனின்
சொத்தை
அபகரிக்கும்
ஆறறிவுமனிதன்
மீது
வழக்கு
தொடுக்க
மனுநீதி
முதல்
மக்கள்
நுகர்வோர்
மன்றம்வரை
எச்சட்டத்தில்
இடமுண்டு
?
யாரேனும்
பதில்
சொல்வீரோ
?
neraimathi@rocketmail.com
|