அம்மாயெனும் தூரிகையே

வித்யாசாகர்

ன் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;

பாட்டின் ஜதிபோல
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே - உன்
அசைவில் மட்டுமே அசைந்து -
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;

டைபாதையின் முட்களை மிதித்து - என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன - அர்ப்பணமே
உன் அன்பிற்கு - அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!

ண்மையில், காற்றின் சப்தத்தை
இசையாக்கிக் கொடுத்த ஒரு
யாழின் பெருமை -
உன்னையே சாரும் அம்மா!

னியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு
நான் - உனக்கு மட்டுமே பிள்ளையாக - பிறப்பேனம்மா!!

 


vidhyasagar1976@gmail.com