இன்று..!

முல்லைஅமுதன்

எல்லைகளைப் பிரித்து போடு!.
உனக்கான நிலத்தை நீயே-
வரையறை செய்து கொள்!
வேலிகளை பலமாக்கு.
எனியும் வயிரவ சூலங்களை
நாட்டுகின்ற செயல் முறையை
இல்லாதொழி!
அரச மரங்கள் முளை விடமுன்
உன் கொடியே
உனதென-
ஊன்றி நடு!
எவன் வருவான்
என்பதெல்லாம் பொய் என்றுணர்.
அயலவனுக்கும் சொல்லி வை..
அல்லது புரிய வை!.
இறுமாப்போடு வாழ எனியாகிலும் பழகிக் கொள்.
கோவணமும் பிடுங்கியாயிற்று.
பூவரசம் இலையில்-
ஊதுகுழல் ஊதலாம் என்கிற கனவை விட

தென்னையிலும்
வெடி சுரக்கும் என்பதை எதிரி உணரட்டுமே!
உனக்கான மொழி இல்லை
என்று-
அவனும் சொன்னதில் வரும் கொள்.
அயலவனையும்-
யோசிக்க வை.
அவனுக்கும் சேர்த்தே-
உன் மொழியில்
தேசிய கீதம் பாடிப் பழகு!!
தேவாரங்களும் பொய்க்கட்டும்.!



mullaiamuthan_03@hotmail.co.uk