புத்தாண்டே
அருள்வாயா....
மன்னார் அமுதன்
புத்தாண்டில்
பல
புதுமை
பூக்க
வேண்டும்
-
முப்
பத்தாண்டு
துன்பமெல்லாம்
போக்க
வேண்டும்
மத்தாப்பாய்
எம்வாழ்வு
மலர
வேண்டும்
-
மனதில்
நிறைந்த
பகை
புகையாக
மறைய
வேண்டும்
இறைவனிடம்
நம்பிக்கை
கொள்ள
வேண்டும்
-
தொழிலில்
இயன்றவரை
புதுமுயற்சி
செய்ய
வேண்டும்
சத்தான
இலக்கியங்கள்
ஆக்க
வேண்டும்
-
தமிழன்
சாதீயக்
கொள்கைகளை
நீக்க
வேண்டும்
பயன்
அறிந்து
பாராட்டா
நட்பு
வேண்டும்
-
மார்பில்
படுமாறு
அடிக்கின்ற
எதிரி
வேண்டும்
இல்லற
இன்பங்கள்
நிறைய
வேண்டும்
–
நாட்டில்
இனிய
தமிழ்க்
குழந்தைகள்
பெருக
வேண்டும்
நல்லறத்தை
நம்மவர்கள்
அறிய
வேண்டும்
–
எவர்க்கும்
நலம்தரும்
செயல்களையே
புரிய
வேண்டும்
சோதனைகள்
எம்மைச்சீர்
தூக்க
வேண்டும்
–
வாழ்வில்
சோர்வென்ற
சொல்லை
நாம்
நீக்க
வேண்டும்
சாதனைகள்
ஆயிரம்
நாம்
படைக்க
வேண்டும்
–
மக்கள்
வேதனைகள்
பொடிப்பொடியாய்
உடைக்க
வேண்டும்
பாதகர்கள்
செயல்களையே
படிக்க
வேண்டும்
–
பாட்டால்
பயத்தினிலே
அவர்
இதயம்
துடிக்க
வேண்டும்
பார்
போற்றும்
பண்புடனே
வாழ
வேண்டும்
–
அயலில்
பசித்தோரைக்
கண்டு
உளம்
நோக
வேண்டும்
புசிக்கையிலே
பசித்தவர்க்கும்
ஈய
வேண்டும்
–
ஊர்வாய்ப்
புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும்
தாங்க
வேண்டும்
கம்பிவேலிக்
கூண்டுகள்
தூள்
ஆக
வேண்டும்
-
எங்கள்
சிறகொடிந்த
பறவைகள்
வான்
காண
வேண்டும்
பல
நூறு
ஆண்டுகள்
நாம்
ஆள
வேண்டும்
–
அறத்தில்
பல
கோடி
நல்லிதயம்
வாழ
வேண்டும்
amujo1984@gmail.com
|