நடுநிசி, கைவிடப்பட்ட ஆலயம்

ஆங்கில மூலம்: துர்கா பிரசாத் பாண்டே
தமிழில் : மகரந்தன் 

ரவு தூரங்களை இழுத்து நீளமாக்குகிறது
முடிவற்றதைப்போல்.

இரவு மரணத்தைப் போல.

ஒற்றைப் பறவையின் அழ்ந்த கவலை
அமைதியாக வந்தமர்கிறது
எனது தனிமையின்
அடர்ந்த கிளைமீது.

ஏதோ ஓர் இடத்தில்,
ஒரு பயம் தன்னைத் திறந்துகொள்கிறது, அமைதியாக,
சில பெயர்தெரியாத காட்டுப் பூவைப் போல.
அதன் கருத்த இதழ்கள்
நமது கடந்தகாலக் கல்லறையில் இருந்து
ஒளிந்திருந்து தாக்குகிறது

கைவிடப்பட்ட
கருவறை மூலையில்
விட்டு விட்டு எரியும் அகல் விளக்கு
சண்டை போடுகிறது
தனது சொந்த நிழலோடு.

கைவிடப்பட்ட அந்த ஆலயத்தின் உள்ளே
கருங்கல் தெய்வம்
பலவீனமாக புன்னகைக்கிறது
ஓர் அக்கறையற்ற குழந்தை
தனது நூற்றாண்டு பழம்புராணங்களின்மீது
செங்குத்தாக நின்றுகொண்டிருப்பதைப் போல.


 

maharandan@gmail.com