திடு திடுத்த மழை இரவின் காலை

எஸ்.நளீம

தவத்தில் கண்டெடுத்த வார்த்தைகளடுக்கி
ஒரு அழகுக் கலைஞன்
பூமியில் இருந்தெட்டி
அகலக் கால் பதித்தான் வானத்தில்
பச்சை கொடிகள் சுற்றிப் படர்ந்து
வானம் வரைக்கும் வளர்ந்தன பசுமை
தடையின்றி
இப்போது வானத்தில்
பூமி தொங்கிக் கொண்டிருந்தது
வானம் ஒரு பட்டம் போல் பறக்க
ஆகாயம் கரைந்து
பூமியில் இறங்கும்
ஒரு திடு திடுத்த மழை இரவில்
பூமி தரிசனம் நிகழ்ந்திருந்தது
கொடிகளைப் பற்றியபடி
இறங்கியிருந்தான்
ஊர் செழித்திருந்தது
காலையில் கண் விழித்தால்
ஊர் முழுதும் அவன் காலடிகள்




naleemart@gmail.com