வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

வித்யாசாகர்

ரு சின்ன முத்தத்தில் இதயம்
ஒட்டிக் கொள்ளவும் -
உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.

நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும்
பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் -
ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது..

முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து
உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க
உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது..

பேசிக் கழிக்காத பொழுதொன்றாய்
ஒவ்வொரு நாளினையும்வாழ்ந்து காண்பிக்க
காலக் கணக்கின் அச்சாணி புடுங்கி -

ஒரு அசட்டுத் தைரியம் உட்புகுந்து
வருடங்களை எல்லாம் நாட்களாய் மாற்றி
நாட்களை நொடிகளாய் திரித்து - யுகம் பல உன்னுள் தொலைக்க

உனை மட்டுமே தேடி -
யாருமிலா அண்டப் பெருவெளியில்
அலைகிறதென் இமைப் பூட்டாத யிக் கண்களிரண்டும்..

உச்சி நடுக்கோட்டில் முத்தம் பதித்து
பாதபஞ்சுதனில் பூமிபடாதுனை - நெஞ்சுக் கூட்டில் தாங்கி நிற்க
நித்தமும் நித்தமும் ஓர் தவம்
காத்திருப்பின் கண்ணீர்பெருக்கில் கரைந்தே போகிறதெனில்
நம்புவாயா???

சப்தமிடாத வானத்தின் இரவொன்றில்
நட்சத்திரம் பொருக்கி பெயர்கோர்த்து
அதற்கு வானவில்லில் கோடுகிழித்தா லென்ன யெனும் கற்பனை
உனை எண்ணும் போதெல்லாம் -
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் - உன் நினைவுகளாய் உள்ளே
பெருக்கெடுக்கிறது...

காலத்திற்குமான சாபமாக காதலை திரித்த
பொய்யர்களின் முகத்தில் - எது காதலென எழுதிவிட்டு
ஜாதியின் மதத்தின் வெறியை
ஒரு முத்தத்தில் அழித்துவிட்டு -
வெறுமனே  திரும்பிப் படுத்துக் கொள்ளும்
ஒரு இள-ரத்த துணிவல்ல யிது;

உன்னோடு வாழமட்டுமே -
கனவின்றி காத்திருக்கும் ஒரு வாலிபனின் உணர்வு.

உனக்கும் பிடிக்குமெனில் சொல் -
இரு கைவிரித்து -
இதோ இந்த கனம் முதல் நமதென்று முழங்கி
வார்த்தைகளில்லா ஓரிடம் நோக்கி
நீயும் நானும் பறந்துபோவோம்!!!



vidhyasagar1976@gmail.com