ஏது செய்வது??

.எலிசபெத (இலங்கை)

தமிழ் காற்றை
தரணியெங்கும் சுவாசித்து-நல்ல
தலைமைகள் உருவாகிட
தலைவிதிகள் செய்திடலாம்...

பூமியெங்கும்
பூத்துக்கிடக்கும்
பூரிப்புக்களெல்லா மொன்றாக்கி-புது
பூலோகம் செய்திடலாம்...

கண்மணிக்குள் கலந்திருக்கும்
கனவுகளையும்
கல்லுக்குள் ஒளிந்திருக்கும்
கலைகளையும் புனரமைத்து
கலியுகம் செய்திடலாம்...

விண்ணுக்குள் புகுந்திடும்
விஞ்ஞானம் போல
விளைநிலங்களில்-வறுமையகற்றும்
வித்தைகள் செய்திடலாம்...

காலங்காலமாய்
காதல் வளர்த்து
கல்லறைகளமைத்திட்ட நாம்
கல்யாணங்களை முறித்திடும்-காதலுக்கு
கல்லறை செய்திடலாம்...

எதுவுமற்ற மடமைகளகற்றி
எண்ணற்ற எண்ணங்கள் சூழ
ஏதேனும் செய்திடலாம்-மனிதத்தை
எய்திடலாம்..!!!


 

thangarajelizabeth@yahoo.com