மனிதநேயம்

மன்னார் அமுதன்                               
                                           
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு
உணர்கிறேன் 
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது
நெடுஞ்சாலை

உச்சுக் கொட்டியவர்கள்
ஓடிப்
போய்
அள்ளிக்
கொண்டனர்
மாம்பழங்களை


amujo1984@gmail.com