வழக்குரை மன்றம்

லறீனா அப்துல் ஹக், இலங்கை

'கோவலன் கொலையுண்டான்'
செய்தி
வந்ததும்
காற்று
மௌனித்து
அஞ்சலி
செலுத்தியது.

* * * * * * *
இரவுக்கு
வெள்ளையடிக்க
நிலவு
பொழிந்தாலும் -தேச
இருட்டுக்கு
அஞ்சி
காரைபெயர்ந்த
குடிலுக்குள்-அவள்
கந்தல்
சாக்கிலே சுருண்டிருந்தாள்.
கண்முன்
கணவனின் சடலமிருந்தும்
அடையாளம்
காட்டி அழமுடியாது
உணர்வுகளைப்
புதைத்திட்ட 
நேற்றைய
அவலத்தில்
நொறுங்கியிருந்தாள்
.

* * * * * * *
கண்ணகி
தேவிக்கு
கண்கள்
சிவந்தன
கூந்தல்
அவிழ்ந்து
காற்றில்
அலைந்தது
முகத்தினில்
ரௌத்திரம்
தாண்டவம்
புரிந்தது.

* * * * * * *

எட்டு மணிக்குள்
ஊர்
அடங்கிற்று 
நீண்டு
ஒலித்தது
நாய்களின்
ஓலம்!
ஒன்பது
மணிக்கு
கதவு
தட்டப்பட்டது
திறக்குமுன்பே
-  தாழ்
தெறித்து
விழுந்தது.
உதைத்த
உதையில்
கதவு
கழன்றது.
"
திடீர் சோதனை'
தமிழ்ப்
பெண்களின் மீதே
ஐயம்
" என்றனர்.
வேதனை
விழுங்கி
வண்டியிலேறிட
அங்கே
இன்னும்
இவள் போல்
இளைய
புறாக்கள்!

* * * * * * *
எரிதழல்
எழுந்து
இருவிழியாகிட
முகத்தினில்
செந்தீ
மேவி
விளங்கிட
வீண்பழி
பொறுக்காது கண்ணகி
வீறு
கொண்டெழுந்தாள்!

 * * * * * * *
சேலைத்
தலைப்பினை 
ஒருவன்
இழுத்தான்
கத்திய
வாயை 
மற்றவன்
பொத்தினான்
கட்டிக்காத்த
"எல்லாம்"  - அந்த
ஓடும்
வண்டியில்
உருக்குலைந்தாயிற்று
!
வதை
முகாம்களில்
விசாரணைப்
போர்வையில் - உயரதிகாரிகள்
மீண்டும்
ஒருமுறை 
மிருகமானார்கள்
!

* * * * * * *
கண்ணகி
கொங்கையைக்
கழற்றி
எறிந்தாள்
பற்றி
எரிந்தது 
மாநகர்
மதுரை!

 * * * * * * *

வழக்குரை மன்றில் வனிதை...
விசாரணை
, குறுக்குக் கேள்விகள்...
வார்த்தையால்
மறுபடி
வல்லுறவு
நடந்தது.
ஆனால்
... 
அன்று
போல்
எரிப்பதற்கென்ன
எஞ்சியிருக்கிறது,
ஏலவே
"எல்லாமே"
கருகிவிட்ட
ஒரு நாட்டில்?



lareenahaq@gmail.com