வா மணப்போம் விதவை

மன்னார் அமுதன்                       
                                           
வேண்டு மெமக்கும் 
விடுதலை
யென்று 
தீண்டும்
வெயிலில் 
பட்டினி
கிடந்துபின்
ஆகாது
அதுவென்று 
அறியும்
ஒருநாளில்
தீட்டினோம்
கூராயுதம்

ஆயினும் பெரிதாய் 
ஆக்கிய
தொன்றில்லை 
பேயினுக்
கெதிராய்ப் 
போர்க்கொடி
தூக்கியெம்
பூவையும்
பொட்டையும் 
இழந்தோம்
- நம்வீட்டு
பூவைக்கு
பூவைப்பார்
யார்

புண்ணதுவே புண்ணாக 
இருக்கட்டும்
நெஞ்சத்தில்
மண்ணுக்காய்
இல்லாமல் 
மாண்டவென்
தோழர்க்காய்
வென்றே
தரவேண்டும் 
விரைவாக
சந்ததியை
வா
மணப்போம்
விதவை

இறுதித் தருவாயில் 
உயிர்நீத்த
உடற்கெல்லாம்
சிறுதீ
மூட்ட ஆளில்லை 
குற்றுயிராய்க்
 
கிடந்த
உடலேறிச் 
சுகம்கண்ட
காடையரின்
பண்பாட்டைப்
பார்த்தே
பழகு

ஆண்டாண்டு காலமாய் 
ஆண்ட
பூமியினை
பூண்டோடு
அழித்துப் 
புன்னகையைச்
சீரழித்தீர்
மாண்டோ
போனோம் 
மறவர்நாம்
- வடலிகள்
மீண்டும்
வானுயரும்


amujo1984@gmail.com