அந்த ஒருவன்...

மன்னார் அமுதன்    
 
                
                                 
உன்னைப் போலவே தான்
நானும்
பிரமிக்கின்றேன்

எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ
என்னுள்
நுழைந்திருந்தாய்

இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில்
-உன்
ஒற்றைத்
தலைவலியையும்
இணைத்துக்
கொண்டாய்

பழகியதைப் போலவே
ஏதோ
ஒரு நொடியில் 
பிரிந்தும்
சென்றாய்

ஏன் பழகினாய்
ஏன்
பிரிந்தாய்
எதுவுமறியாமல்
 
அலைந்த
நாட்களில் தான்
மீண்டும்
வருகிறாய்
மற்றொரு
காதல்
மடலோடு

எப்படி ஏற்றுக் கொள்ள
நானலைந்த
தெருக்களில்
காரணமறியாமல்
அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்


amujo1984@gmail.com