சூரியன் பற்றி..

நாச்சியாதீவு பர்வீன்

தனது வெள்ளிக்கதிர்களை
பாய்ச்சிய
வண்ணம்
எங்கள்
ஊர் குளத்தின்
கிழக்குப்புரமிருந்து
...
அவன்
எழுந்தான்..

எல்லாவற்றையும்
விழுங்கி
ஏப்பமிடும்
கொடூரப்பார்வை

அனலாய்
இறங்கியது பூமியில்

அவன் வேலைக்குப்
புறப்பட்டு
விட்டான்
எந்த
மனிதனின்
அதட்டல்
குரலோ
அல்லது
கட்டளைகளோ
அவனை
எதுவும் செய்துவிடாது..

உலகை சுற்றி
வருவதும்
..
ஒழி
பாய்ச்சி
உயிர்
கொடுப்பதும்
இன்னும்
பலதும்
அவனது
அன்றாட கருமங்கள்

ஒவ்வொரு நாளும்
உயிர்த்தெழும்
  அவன்
அதே
நாள் பின்னேரம்
எங்கள்
ஊரின்
மேற்குப்புற
வயல்வெளிகளில்
காணாமல்
போய்விடுகிறான்

விஞ்ஞானம் என்ன சொன்னாலும்
ஒரு
கிராமத்து சராசரி
 மனிதனின் நினைப்பு

இப்படித்தான்
இருக்கிறது..
சூரியன்
பற்றி..

 

armfarveen@gmail.com