படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி

கவிஞர் இரா .இரவி



ஓவியம் வரையும் ரங்கராஜன் என்ற பெயரை !
ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு !

ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிடடாலும் !
கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி !

திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி!
திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி !

மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி!
மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி !

சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி !
சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி !

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி !
பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி !

வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி !
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் .ஜி .ஆர் !

உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி !
உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும் !

உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி !
உடன் சிரித்து ரசித்த உயர்ந்த மனிதர் எம் .ஜி .ஆர் .!

எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று எழுதி!
எம் .ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி!

மல்லிகை என் மன்னன மயங்கும் என்று எழுதி !
மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி !

தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி !
தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி !

பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த கவிஞர் வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை !

ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி !
ஒப்பற்ற கவிதைளை வடித்துத் தந்தவர் வாலி !

கவியரங்கங்களில் தலைமை வகித்தவர் வாலி !
கை தட்டல்களைப் பரிசாகப் பெற்றவர் வாலி !

கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி !
கற்பனைக் கவியால் தாடி உள்ள தாகூர் ஆனார் வாலி !

கண்ணதாசனை மீசை இல்லா பாரதி என்றார் வாலி !
கற்க்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார்வாலி!

படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! மரணம் இல்லை ! மரணம் இல்லை !

 

eraeravik@gmail.com