வீதிவழியே ஒரு பயணம்

முனைவென்றி நா. சுரேஷ்குமார்

வந்து போனதற்கான 
தடயங்கள்
ஏதுமின்றி 
அமைதியாய்க்
கிடக்கின்றது 
அந்த
வீதி

மணம்வீசி
அடையாளப்படுத்திக்
கொண்டிருக்கின்றன 
அந்த
மலர்கள் 

துள்ளித் திரிந்த 
மழலைகளும்
 
நின்று
கவனிக்கின்றன 
விபரமேதும்
அறியாமல்...

கண்கள் கலங்கும் 
வானம்
 

வீதிவழி மௌனமாய் 
ஒரு
பயணம் 

நெஞ்சமெங்கும் 
பிரிவின்
வலி

நெருப்பை அணைக்க முயன்று 
தோற்றுத்தான்
போகின்றன
அந்தக்
கண்ணீர்த் துளிகள் 

 

munaivendri.naa.sureshkumar@gmail.com