எல்லாமே என் ராசாத்தி..

வித்யாசாகர


ன் பேச்செல்லாம் என் பேச்சு
உன் நடையெல்லாம் என் நடை
நீ காட்டும் அன்பெல்லாம் என் அன்பு
ஆனா நீமட்டும் போறியேடி..

உன் கனவெல்லாம் என் கனவு
உன் ஆசையெல்லாம் என் வரைக்கும்
நீ நிற்குமிடமெல்லாம் என் கூட
இன்று நீ இல்லாத வீடெங்கும் நானில்லாக் கோலமடி;

நீ தொட்டதெல்லாம் உன் சொந்தம்
கேட்டதெல்லாம் உன் சொத்து
நான் வாங்கன்னு நினச்சதெல்லாம் உனக்காக
இப்போ நீ போகும் பாதையில என் உசிரும் போகுதடி;

நீ சிரிச்சாலே பூக்கும் வீடு
நீ பேசினாதான் நிறையும் மனசு
நீ இல்லைன்னு நினைச்சாலே அழுகிற உறவு
இன்று நீயில்லா வீடுதாண்டி' நீ வரும்பாதைப் பார்க்குதடி;

நீ ஒருநேரம் பிரிந்தாலே
உயிர் இரண்டா உடையும்,
நீ ஒரு நாள் இல்லாத வீடு நெருப்பா தகிக்கும்,
நீயின்றி உண்ணும் ஒருவாய்ச் சோறும்
நஞ்சா உள்ளிறங்கும்;

இப்போ மொத்தமா பிரியிரியே; வாழ்க்கையை
வெறும்வீட்டில் விட்டுட்டியே..,

நான்கூட்டி வந்தப்பாவம்உனைக்
கூட்டிப் போகுதோடி,
நானன்று வெச்ச நெருப்பு
என் வயிற்றில் எரியுதோடி,

பாட்டன் முப்பாட்டன் பறிச்சுவெச்சப்
பள்ளத்தில
என் கண்ணீர் நிரம்புதடி,
அது விதி அது நோகட்டும்' நீ போ போ மகளே,

அப்பன் முகம் கண்ணில் நின்னா
கனவன் முகம் பார்த்துக்கோடி,

இனி கனவிலாவது வந்து வந்து
எனை அப்பான்னு அழைச்சுக்கோடி..
அதுவரையும் காத்திருப்பேன்; நீ
வரும்வரைக்கும் வாழ்ந்திருப்பேன்; வாழ்க்கை
கசப்புன்னுத் தெரிந்தாலும் நீ
வரும்பாதைப் பார்த்திருப்பேன்!!



vidhyasagar1976@gmail.com