யார இவர்கள்?
(கன்னட மொழிக்கவிதை)

சுமதீந்திர நாடிக

நகரமெங்கும் உறக்கத்தின் பிடியில்
இரவுகள்
பல-
சொல்லி
வைத்ததுபோல்
வீட்டருகே
நிலம் தோண்டும் சப்தம்
வயலுமில்லை
பூங்வாவுமில்லை
எழுந்து
பார்த்தால்
வெட்டவெளியில்
ஒருவரையும்
காணோம்
தோண்டுபவர்கள்
யாரோ-
எத்துணை
எத்துணை தடவைகள்
மேலும்
கீழுமாய் போயிருக்கும் இந்த மண்,
இப்படித்
தோண்டுவோர்
யாராய்
இருப்பர்?

 

நன்றி: திசைஎட்டும்