என்தாய்

நோர்வே நக்கீரா

காலம் பூராய் தாதியாய்
சமையல்காரியாய்
கட்டில்
பிணமாய்
அடுக்களைக்கும்
 
படுக்கையறைக்கும்
மரதநோட்டம்
ஓடியப் பிள்ளைப்பெற்ற தாய்மெசின்
சேடம்
இழுக்கும் போது கூட
வெளியில்
போகும் அப்பாவைக் கூப்பிடுகிறது
'
தொப்பியப்பா
வெளியில்
குளிர்"
குளிரோடி
நான் உறைந்து போகிறேன்.