கள்ளச்சாராயம்

வித்யாசாகர்

றுபத்தினாலு பேர்
கள்ளச்சாராயம் குடித்து மரணம்;
அறுபத்தினாலு குடும்பங்களின்
அழுகைக்கு
தீர்வில்லா
நம் கொடூர மௌனம்..

எதற்கும் வருத்தமின்றி
திறந்திருக்கும் டாஸ்மாக்;
பலரின் கொள்ளிக்கு முன்பே
முதல் தீயிட்ட அரசு..

குடிக்க விற்றுவிட்டு
குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்;
குடியினால் குடி முழுகும்
கண்ணீரில் நேரும் மரணம்..

புரியாத திட்டங்களும்
திட்டமில்லா வாழ்க்கையுமாய் நாம்;
நம் கண்முன்னே
நம்மால் அழியும் உலகு..