விபத்து

வித்யாசாகர்



ங்கே ரயில் கவிழ்ந்தது
அங்கே பேருந்து இடித்துச் சிதறியது
நான்கு பேர் காயம்

ஆறு பேர் மரணம்
அச்சச்சோ!!
கண்களை மூடிக் கொள்கிறேன்
மனது பதறிக்கொண்டேயிருக்கிறது.,

முட்டாள்கள் என்றோ
பாவிகள் என்றோ
பாவம் என்றோ யாரைச் சொல்வது?

நாமெல்லோருமே
மாறாதவரை
மாற்றிச் சிந்திக்காதவரை
மரணங்களும் காயங்களும் தொடரும்..

ஒருநாள்
நம்மையும் அந்த பேருந்தோ
ரயிலோ
மரணமோ காயமோ தொடலாம்

தொடும்முன் யோசித்தால் அந்த
நான்கு பேரோ
ஆறு பேரோ
இனி காப்பாற்றப் படலாம்..