தீபாவளித் திருநாள் வாழ்வின் சுடர்தரும் நாளேயாகும்

தீவகம் வே.இராசலிங்கம்
 




வாழ்வியல் சோதி யாகும்!
    வருமிடர்
கரைந்து போகும்
ஆழ்மனம்
அமைதி காணும்!
    அருகொடும்
இனங்கள் வாழும்!
ஏழ்மையும்
தொலைந்து போகும்!
    இரும்பகை
மறைந்து போகும்!
பாழ்மனத்
தோடு நிற்கும்
    பகைவரும்
மாறி நிற்பார்!

தீமையின் தொடர்கள் சாயும்!
    துட்டரும்
வெற்றி காணார்!
ஆமைகள்
தலையைக் கவ்வி
    அடைதொறும்
உறங்கல் போலும்
ஏமரும்
தோற்றுப் போவார்!
    ஏந்திளை
வன்மம் பாய்ச்சும்
காமருஞ்
சிதறக் காண்பார்!
    கனிநிலம்
ஒளியில் மிஞ்சும்!

எத்தனை மாய்மா லங்கள்!
    எத்தனை
போர்மா யங்கள்!
சுத்தமத்
தளங்கள் தட்டும்
   தீயவர்
அழிவார்! பாட்டுச்
சத்தமாய்
உலகைத் தீண்டி
   சதியொடும்
மனிதம் செத்தால்
நித்திரை
போலும் உண்மை
   நிசக்கதிர்
புயலாய்த் தோன்றும்

தெளிவது தோன்றும்! தீபத்
   திருநாளில்
வாய்மை தோன்றும்
உளியொடுங்
கரத்துச் சிற்பி
   உருவிலே
மனிதம் தோன்றும்!
எளிமையும்
உடையும் வண்ண
   இறையென
இல்லம் தோன்றும்
களிபெரும்
வாழ்வு எட்டக்
   காணுவர்
தீப நாளோ!
 

ஏய்ப்பவர் மாய்ந்து> இனத்தொடும் கனியும் எங்கள் நல்லதொரு தீர்வுக்காய் தீப விளக்கு ஏற்றுதல் செய்வோம்!