முகமூடிக்குள் புதைந்திருக்கிறது !

கா..கல்யாணசுந்தரம்

ண்ணக் கலவைகள்  

கிண்ணத்தில் இருந்தன...

ஆடை களைந்து

மினுக்கும் ஜிகினா

உடையணியும் நேரம்

ஒரு முறை மீண்டும்

நிலைக்கண்ணாடியில்

தன்னைப்பார்த்து மீள்கையில்

ஒப்பனைக் கலைஞன்

அவனருகே .....!

திரைவிலகியதும்

முதல் காட்சியில்

தோன்றவேண்டும்.....!

வீதியெங்கும் ஆவலுடன்

அமர்ந்திருக்கும்

ரசிகர்கள்....!

ஹார்மோனியப் பெட்டியுடன்

பாட்டுவாதியார்

பக்க வாத்தியங்களுக்கு

நடுவே...!

மாதக்கணக்கில்

ஒத்திகை பார்த்து

நினைவில்கொண்ட பாடலை

உச்ச குரலில் பாடவேண்டும்  !

ஆம்.....................

அரிதாரம் பூசி கோமாளியாய்

மற்றவர்களை சிரிக்கச்செயும்

இவனது நிஜ வாழ்க்கை ...

ஒரு முகமூடிக்குள்

புதைந்திருக்கிறது !