தொலைந்து போன கடிதம்

கவிஞர் இரா.இரவி

மிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க
கடலுக்குள் செல்லும்போதெல்லாம் !
இலங்கை இராணுவம் உடனே வந்து
இரக்கமின்றி சுடும் ! கைது செய்யும் !

கடலில் ஆதிக்கம் செலுத்தும்
கண்டபடி சுட்டுத் தள்ளும் !
படகுகளைப் பறிமுதல் செய்யும்
பாவம் வலைகளையும் அறுக்கும் !

மீன்களையும் பறிமுதல் செய்யும்
மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் !
இலங்கை சிறையில் அடைக்கும்
இன்னும் சித்திரவைதைகள் செய்யும் !

தானம் தந்த கச்சத் தீவில் தமிழர்களின்
தலை தெரிந்தால் சுட்டு விடும் !
வலை உலர்த்த அனுமதி இருந்தும்
வளைத்து கைது செய்து மகிழும் !

அப்பாவி மீனவர்கள் மீது அவர்கள்
ஆயுதம் கடத்துவதாய் வழக்குப் போடும் !
இழந்த உயிர்கள் கணக்கில் அடங்காது
இன்னும் மீனவர் வாழ்க்கை விடியவில்லை !

தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர்
தட்டிக் கேட்க நாதியே இல்லை !
முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார் !

வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
தொலைந்து போன கடிதம் ஆகும் !



eraeravik@gmail.com