விளக்கு..

வித்யாசாகர்


உள்ளே
ஒரு விளக்கு எரிவது

தெரிகிறது..

இப்போதெல்லாம்
அந்த விளக்கு இங்குமங்குமாய்
அசைகிறது

சட்டென
அணைந்துவிடுமோ
என்றொரு பயம்கூடஎனக்கு

பயத்தை அகற்றி
இங்கொன்றுமாய்
அங்கொன்றுமாய் வந்து சில கைகள்
விளக்கை மூடிக்கொள்கின்றன

மூடிய கைகளின் அன்பில்
அணையாது எரிகிறது
அந்த விளக்கு

அது எரியும்
எரியும்
யாரும் கல்லெறிந்து விடாதவரை
அது எரியும்..

அதற்குப் பெயர் நான்!!