அழகே அழகே..

வித்யாசாகர்
 


1
படபடவென
புத்தகத் தாள்கள் போலவே
படபடக்கிறது மனசு;

ஒவ்வொருப் பக்கத்திலும்
எழுதிவைத்துக்கொள்கிறேன்
உனது சிரிப்பை..
-------------------------------

2
ஒவ்வொரு
நட்சதிரங்களையும்
உடைத்து உடைத்து -

வேறென்ன செய்யப்போகிறேன்
உன் -
பெயரெழுதுவதைத் தவிர..

----------------------------------

3
முன் பேருந்தில் நீ
பின் பேருந்தில் நான்,

படியேறி
படியேறி நிற்கிறது மனசு
உன்னிடம்..
-----------------------------------
4
நீ நிலா அல்ல
நதி அல்ல
அன்னமோ தென்றலோ அல்ல

ஆனால் எல்லாமே நீ
ஏனெனில் அது நீ..
----------------------------------
5
தண்ணீரை கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;

மீண்டும்
தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;

அம்மா 'என்னடா பைத்தியமா உனக்கு'
என்கிறாள்,

நான் இல்லையென்றெல்லாம்
சொல்லவில்லை,

மீண்டும் தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் பார்க்க!!




vidhyasagar1976@gmail.com