பொன்னுசாமி பேசுகிறார்!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

 


 

மேலாண்மைப் பொன்னு(ச்)சாமி விளையும் செந்நெல்
விரவிவரும்
நிலவயலிற் பிறந்த செம்மல்
வேளாண்மைப்
பொன்னுலகைப் பிரச வித்தோன்
வியர்வையினை
மையாக முரசு வைத்தோன்
நாளாந்தங்
களஞ்சியங்கள் நாடு கொள்ள
நல்லாற்றுச்
சமுதாய நலங்கள் செய்தோன்
கோளார்ந்த
அழைப்பென்று குறுக்கி வாழ்வைக்
குவலயத்தின்
படிசார்ந்து கொண்டான் அம்மா!

ஐந்தாகும்
வகுப்புவரை ஆகுங் கல்வி
அதிபெரிய
படிப்பென்னும் அளவு கோலை
சிந்தாகும்
அவன்மதியிற் சிறந்த பின்னும்
செகவலத்தில்
எழுத்தாற்றல் சுரந்த வண்ணம்
நந்தாத
வருடங்கள் நாற்ப தென்ற
நடைபாதைக்
கருக்கலிலே நரம்பு செய்தோன்!
பந்தாகத்
துடிதுடிக்கும் பயிர்செய் தோனைப்
பட்டறிவில்
எழுதுவித்தோன் பறந்தான் அம்மா!

மார்க்கிசங்கள் வறுமைமிடி வதைக்கும் ஏழ்மை
வக்கிரங்கள்
எழுதிவர மனப்புத் தைத்து
தேர்ச்சிறகாய்
உருண்டுவரும் துரவின் நீரில்
தேர்ந்துவரும்
எழுத்தோடுந் துறையைக் கண்டேன்!
ஈர்ப்பெனவே
உருசியாவின் எழுத்துங் காந்தன்
இயங்குதுறை
என்றனுக்குள் இசைந்த தின்னும்
வார்ப்பெனவே
சிறுகதைக்கு வரைந்த நூல்கள்
வந்தனவே
எட்டோடு இன்னும் பாரீர்!

பொன்னுசாமி எழுத்தெனறு புதுக்கா டுற்றுப்
பிரசவிக்கும்
வயல்வெளியின் பேசுங் காற்றுப்
பின்னலிலே
வாழ்வியற்றும் புத்த கத்தும்
புன்னகையாய்
அன்புருவாய் பூக்குந் தேசம்
என்னதுவாய்க்
கிராமமது இயங்கும் போதில்
என்றனுயிர்க்
கிணையேது எழுதுஞ் சாவின்
துன்பமயம்
ஏதுமில்லை தொலைவின் பின்னும்
துடித்துவரும்
என்னெழுத்துத் தோன்றும் அப்பா!


தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்