கனடா ஹைக்கூ

கவிஞர் இனியன்
 


 

னடாவில் எல்லோரும்

கைகட்டி நிற்கிறார்கள்

கடுங்குளிர்

 

நீர்மேல் இவர்கள்

நிதானமாய் நடப்பர்

நீர் பனிக்கட்டி ஆவதால்.
 

நம்மூரில் சாலையில் சேறு

இவ்வூரில் பனிக்கட்டி

சறுக்கி விடும்!
 

நடுங்கும் குளிரில்

நடமாடும் எல்லோரும்

முகமூடி மனிதர்களாய்!
 

அம்மணமாய் நின்றாலும்

அழகுதான்

இலையுதிர்ந்த மரங்கள்.
 

ஆடைக்குறைப்பு இல்லை

இளம்பெண்களிடம்

கடுங்குளிர் என்பதால்.
 

வீட்டுக்கு வீடு

மும்மூன்று குழந்தைகள்

கடுங்குளிர் புண்ணியத்தில்!

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்