உதய புத்தாண்டே

கவிஞர் புகாரி



ன்றைய ஒளிர்வாய்
நேற்றுகளில் சிக்காத
நெய்வாச
நம்பிக்கைச் சுடர்கள்

விழித்தளத்தில்
இமைக்கரைகளைப்
பெயர்த்தோடும்
வற்றாத
வண்ண வண்ணக்
கனவு நதிகள்

நித்தம் நித்தம்
கையணைவில்
நீண்டு வளரும்
புத்தம் புதுச்
சந்தோசங்கள்

முதன்மைபெற்று
முடிவற்று
உயிர்தொட்டுத் தழுவட்டும்
புத்தாண்டுப் புலர்வினிலே

உதய
புத்தாண்டிலென்
இதய
வாழ்த்துக்கள்

*
வளர வளர
நீ மட்டும் புதுசு

உன்னால் இன்று
நான்
மேலும் பழசு

புது நரையாய்
மூப்பு
வலுக்கட்டாயமானாலும்

இன்று
புதிதாய்ப் பிறந்தோம்
என்று
உன்னோடு நானும்
இணையும்போது

உன்னைக் குதூகலமாய்க்
கொண்டாடுகிறேன்
புத்தாண்டே

துளிர்ப்
புத்தாண்டின்
தளிர்
வாழ்த்துக்கள்
 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்