நமக்கில்லை ஞாயிற்றுக்கிழமை

கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்



காலம் என்பதில் காலடிச் சுவட்டை
     கவன மாக
     பதித்திடுவாய் - இந்த
ஞாலம் போற்ற ஞாயிற்றுக் கிழமையும்
     ஞாயிறு போல
     ஒளியிடுவாய்

வாழ்வில் இன்பம் வந்து குவிந்திட
     வியர்வை சிந்தி
     உழைத்திடுவாய்- நீ
வீழ்ந்திடும் மழையாய் மாறியிங்கே
     விதையின் உறக்கம்
     களைத்திடுவாய்

எல்லா உயிரும் எமதின் உயிரே
     என்றே எண்ணி
    அணைத்திடுவாய்- நீ
வெல்லும் சொல்லை வேரெனச் சொல்லி
    வெற்றி தன்னை
    குவித்திடுவாய்
 




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்