பொங்கலோ பொங்கல்

கவிஞர் புகாரி



ஞ்சள் கொத்தோடு
       மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
       எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
      வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
      பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
       கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
       குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
      ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
      பாடிவரும் பொங்கலிது

வீட்டுப் பசுமாடும்
       வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
       பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
       தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
       அழகுமணிப் பொங்கலிது

மண்ணைக் கையெடுக்க
       மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
       பெருமிதத்தில் கண்விரிய

அன்னம் கொடுப்பவளின்
       அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
      நிலம்புகழும் பொங்கலிது
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்