சுயநலம்

கவிஞர் புகாரி

சுயநலம்
விரிந்து விரிந்து
சூரையாடியது
உலகை

பலங்கொண்ட சுயநலம்
பதரான சுயநலங்களைக்
கொன்று மென்று
தின்று செரித்தது

இறுதியாய்...

ஒரே ஒரு
சுயநலம் மட்டுமே
மீந்தது
வாழ்ந்தது

ஒற்றை உயிரைச்
சுமக்கக் கசந்து

தன்னைத் தானே
சுருக்கிச் சுருக்கி

மீண்டும்
கருந்துளைக்குள்ளேயே
காணாமலே போனது
பரிதாபப் பிரபஞ்சம்


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்