கைத்தொழில்

பாலாஜி.ச.இமலாதித்தன்

ஏழெட்டு பிள்ளைகளை
ஈன்றெடுத்த தாடிக்காரனொருவன்
தன் நாலுவயது மகனுக்கு
கைத்தொழிலாய் மாறிப்போன
சுயவேலை யொன்றை
சிலகாலம் பயிற்றுவித்து...
கலைந்து கிடக்கும் முடியோடும்
கறை படிந்த உடையோடும்
முதல்நாள் தொழிலுக்கு
தன்மகனை அழைத்துவந்து
பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைத்து
போய்வருகிற எல்லோரையும்
சட்டையைப் பிடித்திழுத்து
கைநீட்டி கேட்கச்சொல்கிறான்
பிச்சை...!


emalathithan@gmail.com