காலத்தை வென்ற கவி

பாவலர் கருமலைத்தமிழாழன்

ங்கத்துப் பாக்கள்தம் சாறெடுத்துச் சிந்துகளாய்
இங்கிருக்கும் பாமரர்க்கே ஈந்திட்டான் ! - தாங்கியவர்
சீலமுடன் இன்றும் சிரம்கொள்ளக் கண்ணதாசன்
காலத்தை வென்ற கவி !

ட்டனத்தி ஆதிமந்தி ஆன்றசுவை மாங்கனியை
நாட்டிற் களித்த நறுங்கவிஞன் ! - பாட்டினிலே
கோலத்தை மாற்றிக் கொடுத்ததனால் கண்ணதாசன்
காலத்தை வென்ற கவி !
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்