விலகுதலின வலி

ஒளியவன்

தனிமையின்
பேய்க்கரங்களால்
என்னைச் சூழ்ந்திருந்த
வெய்யிலில்
தவிர்க்க முடியாத
காரணங்களுக்கு
அடிமையானவனாய்
உனது கோரிக்கைகளை
நிராகரிக்கும் கோடாரிகளாக
எனது சொற்களுக்கு
வலுவூட்டிக்
கொண்டிருந்தேன்
நாம் நடந்த
ஒரு சாலையில்
நடந்து செல்லும்போது
அகலப்படுத்துதலின்
பெயரில் மரங்கள்
அகற்றப்பட்டிருந்தன
சாலைக்குப்
புரிந்திருக்கும்
என்
விலகுதலின் வலி.

        

oliyavan.b@gmail.com