(வர) பாண்டி

திரைவிமர்சனம்:  ஞா.ஆரணி


நடிகர்கள்: ராஜ்கிரண், தனுஷ், மடோனா, ரேவதி, பிரசன்னா, சாயா சிங்
 

ஒளிப்பதிவு: வேல்ராஜ்
 

இசை: ஷான் ரோல்டன்
 

தயாரிப்பு: வுண்டர்பார் பிலிம்ஸ்
 

இயக்கம்: தனுஷ்

 

பெற்றோரின் முதுமைகால வாழ்க்கையைப் பற்றி ஆய்வுபண்ணும் இப்படம் தனுஷ் இயக்கும் முதல் படம் ஆகும். 'பவர்' பாண்டி என அழைக்கப்படும் பாண்டியன், முன்பு சினிமாத் துறையில் ஒரு மிகச் சிறந்த 'stunt master" ஆக இருந்தவர். இப்பொழுது அவர் தனது மகன், மருமகள் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகளுடன் ஒரு சாதாரண வாழ்க்கையை நகரத்தில் வாழ்கிறார்.
 

அவரது மகனும் அவருக்கு எல்லா வசதிகளையும், சுதந்திரத்தையும் அளிக்கிறார். அவரது பேரப்பிள்ளைகளும் அவர் மீது அதிகமாக அன்பு காட்டுகின்றனர். பாண்டியும் அவரது குடும்பத்துடன் வாழ்வதையே தனது வாழ்க்கையாக எடுக்கிறார்.
 

ஆனால் அவருக்குப் பொழுது போகதில்லை. தனது வாழ்கையில் ஏதோ ஒன்றைத் தொலைத்ததாகவே அவருக்கு தெரிகின்றது. எனவே அவர் தனது பொழுதைப்போக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார். இவை எல்லாம் விபரீதமாக முடிகிறது. அது எவ்வாறு எனப் படத்தைப் பார்த்து அறியுங்கள்.
 

இதனால் பாண்டிக்கும் அவரது மகனுக்கும் இடையே பிரச்சினைகள் வருகின்றன. இவை இவர்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்துகிறது. இதனால் வருத்தப்படும் பாண்டி என்ன செய்கிறார் எனப் படத்தைப் பார்த்து அறியுங்கள். இனி இப்படத்தில் காட்டப்படும் சில கருத்துக்களைப் பார்ப்போம்.
 

இதில் காணப்படும் குடும்பம் மிக சாதாரணமானது. மகன் தனது அப்பாவை மதித்து வீட்டில் இடம் கொடுக்கிறார். வேலைக்குச் செல்கிறார். சிறிய பிரச்சினைகளுக்கு எல்லாம் கோபப்படுகிறார். இதெல்லாம் சாதாரணமாக ஒரு வீட்டில் நடைபெறுகின்ற விடயங்கள். ஆனால் இப்படம் எவ்வாறு பெரியோர்கள் இவற்றை உணர்வார்கள் என்ற பார்வையில் காட்டுகிறது.
 

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே அவர்களது உலகமாகத் தாத்தா, பாட்டிமார் கருதுகையில், ஏன் பிள்ளைகள் பெற்றோர்களின் விருப்பங்களை மதித்து நடப்பது இல்லை? பெற்றோரின் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் திருப்திப்படுத்தினால் சரியா? தனது விரும்பங்களை நிறைவேற்ற விரும்பும் பாண்டி, அவரது உலகில் அவரது குடும்பத்தை விட வேறு ஏதோ வேண்டுமென உணருகிறாhர். அது வேலைக்கு செல்வதோ, வேறு என்னவோ எனப் படத்தைப் பார்த்து அறியுங்கள்.
 

பெற்றோரை அலட்சியப்படுத்தத் கூடாது எனவும் இப்படம் காட்டுகிறது. மகன் தந்தையை இழந்து அவரைத்தேடும் போதுதான் இதை அவர் உணர்கிறார்.
 

இப்படத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரனும், ரேவதியும் மிக நன்றாக நடித்துள்ளனர். இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல படம்.
 

 


 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்