தங்கரதம்

திரைவிமர்சனம்:  கவிஞர் இரா.இரவி


 

நடிகர்கள்: வெற்றி, அதிதி கிருஷ்ணா, சவுந்தர்ராஜன், 'ஆடுகளம்' நரேன்,
                       'நான் கடவுள்'  ராஜேந்திரன் , சுவாமிநாதன், சாண்டில்யா

 

ஒளிப்பதிவு: ஜேக்கப் ரத்தினராஜ்
 

இசை: டோனி பிரிட்டோ
 

இயக்கம்: பாலமுருகன் பி

 

டத்தின் கதாநாயகன் வெற்றி இனிய நண்பர் முனைவர் ஞா.சந்திரன் அவர்களின் நண்பர் .புதியவர்களின் புதிய முயற்சி. ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையில் சரக்கு உத்து ஓட்டுநராக வருகிறார் வெற்றி .இவருக்குப் போட்டியாக மற்றோர் ஓட்டுநர் இவர்களுக்குள் நடக்கும் மோதல் .போட்டி ஓட்டுனரின் தங்கையை வெற்றி காதலிக்கிறார் .காதல் வென்றதா? எனபதே திரைக்கதை .

வெற்றி சிறுவனாக இருக்கும்போதே வெற்றியின் அப்பா தன் நண்பரிடம் வெற்றியை ஒப்படைக்கிறார் .அவரை வெற்றி 'சித்தப்பா' என்றே அழைக்கிறார் .வெற்றியை வெற்றிகரமான ஓட்டுநராக்கி, தங்கரதம் என்ற சரக்கு உந்து வண்டியை வெற்றி பெயரில் பதிந்து தருகிறார் .

வெற்றியின் போட்டியாளர் வெற்றியை கொல்லும் அளவிற்கு பகை உண்டாகிறது வெற்றியைக் காப்பாற்ற சித்தப்பா தன் மகனுக்கு பகையாளியின் தங்கையை திருமண உறுதி செய்து வெற்றியின் உயிரைக் காப்பாற்றுகிறார் .

தன் காதலி என்பது தெரியாமலே,சித்தப்பா தன்னைக் காப்பாற்ற தன் மகனுக்கு திருமண உறுதி செய்தது அறிந்து. தன்னை வளர்த்து உருவாக்கி பாச மழை பொழிந்த சித்தப்பாவிற்க்காக காதலியைப் பிரிகிறார்.தன் நிலையை காதலியிடம் எடுத்துச் சொல்லி விலகுகிறார். வித்தியாசமான முடிவு.வழக்கமாக திரைப்படங்களிலும் காதல் வெல்ல வேண்டுமென்று இணைத்து வைப்பார்கள் .ஆனால் இந்தப்படத்தில் வளர்த்த பாசம் அன்பு வெல்கின்றது .

புதிய இயக்குனருக்கு பாராட்டுக்கள். பாடல்கள், இசை, ஒளிப்பதிவு யாவும் நன்று கதாநாயகன் வெற்றி சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியும் நன்றாக நடித்துள்ளார். புதிய வரவான இந்த அணிக்கு பாராட்டுக்கள். வருங்காலத்தில் இன்னும் சிறந்த திரைப்படங்கள் தருவார்கள் என்று நம்பலாம்.

 


 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்