சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரித் தமிழ்த்துறையும், பன்னாட்டு அரிமா சங்கங்கமும் இணைந்து நடத்திய “பாரதி ஒரு பரவசம்” என்னும் மகாகவி பாரதி விழா

15-09-2017

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரித் தமிழ்த்துறையும், பன்னாட்டு அரிமா சங்கங்கமும் இணைந்து நடத்திய “பாரதி ஒரு பரவசம்” என்னும் மகாகவி பாரதி விழா
15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று சங்கரா கல்லூரியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சங்கரா கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றி சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். அரிமா சங்கத்தைச் சேர்ந்த அரிமா.மகேஸ்வரிசற்குரு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் அவ்வுரையில் பாரதியைப் போல் இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் தாய்மொழியின் மீது பற்று கொண்டவர்களாக இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் நல்வாழ்விற்கு பெரியோர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரிமா சங்க மாவட்ட ஆளுநர் திரு. அரிமா K.காளிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கலைமாமணி முனைவர் சாரதா நம்பி ஆரூரன் அவர்கள் நாதக்கனல் என்னும் தலைப்பில் மகாகவி பாரதியைப்பற்றி பல அரிய கருத்துக்களைக் கூறியதோடு மாணவர்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்து உலக நிகழ்வுகளைப் பற்றி அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் மட்டுமே 36 கோடி இளைஞர்கள் உழைப்பாளர்களாகப் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்கின்றனர் என்றும், பாரதியைப் போன்று பன்மொழித்திறன் பெற்றவர்களாக இன்றைய இளைஞர்கள் உருவாக வேண்டும் என்றும் கூறினார். அரிமா பாலசுப்பிரமணியம் அவர்கள் நன்றியுரை நல்கினார். சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் P.M.அன்புசிவா அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியைச் சிறந்த முறையில் வழிநடத்தினார். இவ்விழாவில் பல்துறை மாணவர்களும், பல்துறைப்பேராசிரியர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.


இணைப்பு: படங்கள்-

 



 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்