காவல் உதவி ஆய்வாளர் திருமதி.பிரபாவதி சுகுமார் எழுதிய 'இனியவை இருபது' நூல் வெளியீட்டுவிழா

03.11.2017


03.11.2017 அன்று மாலை அண்ணாமலை அரங்கில், காவல் உதவி ஆய்வாளர் திருமதி.பிரபாவதி சுகுமார் எழுதிய 'இனியவை இருபது' என்னும் குழந்தைகள் இலக்கிய நூலை காவல் கண்காணிப்பாளர் உயர்திரு முனைவர் பா.மூர்த்தி அவர்கள் வெளியிட அரசு கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சு.துரை அவர்கள் பெற்றுக்கொண்டார். உயர்திரு.மு.வேலாயுதம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சங்கரா அறிவியல் மற்றும் வணகவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். காவல் துறை சார்ந்த 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கவிஞர் அன்புசிவா நன்றி கூறினார்.

படம்:
நூலாசிரியர் திருமதி.பிரபாவதி சுகுமார், மு.வேலாயுதம், முனைவர் பா.மூர்த்தி, முனைவர் பூ.மு.அன்புசிவா ஆகியோர்.

 



 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்