எழுத்தாளர் வதிலைபிரபாவுக்கு தமிழ்நாட்டு அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது.
 

17-02-2019

ழுத்தாளரும், பதிப்பக ஆசிரியரும், சிற்றிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் வதிலைபிரபா அவர்கள், தமிழ்நாடு அரசின் 'தமிழ்ச்செம்மல்' விருதை பெறுகின்றார். வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-02-2019) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இவ்விருதை வழங்குகிறார். விருதுப்பட்டையத்தோடு, ரூபாய் 25,000 காசோலையும் வழங்கப்படுகிறது. விருது பெறப்போகும் வதிலை பிரபாவுக்கு தமிழ்ஆதர்ஸ்.கொம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.